********************************************
காதல் கொள்கிறது என்னை ...
கண் மூடி திறக்கும் முன்னே ...
********************************************
ரங்கனின் பாதம் பணியாதே
என் நாயகர் கால் வருடி செல்லடி
நீ கரை தொடும்போதெல்லாம்
என் கோபம் கரை தாண்டுகிறதடி
கனவெல்லாம் நீயே
கண் திறந்து பார்த்தாலும் நீயே
கானல் நீராய்...
மெய்யாக வர பொழுதுதில்லையோ
இல்லை வரத்தான் பிடிக்கவில்லையோ ???
விரும்பினேன் உன்னை
உன் அழகிற்காக
உன் அடக்கத்திற்காக
உன் அசைவிற்காக
உள்ளவர்களை விடவும் உனக்கு
உயர்வான வாழ்கை என்னால் தரமுடியும்
உயர்வானவன் நான் என்பதை
உலகாளும் ஈசனிடம் தெரிந்துகொள் !!!
வருவேன் வருவேன் என்று
பொய் உரைத்து வதைத்தாய்
வந்த பின் வழிந்தோடினாய்
சொல்லாமல் என்னை விட்டு
நீ படி துறை தாண்டுகையில்
என் பாதி உயிர் போச்சுதடி ...
உடனே உயிர் பெற்று வா
என் உறவிற்கு உயிர் கொடுக்க
தனிமையின் சுகத்தை தந்தாய்
என்னை தனிமையிலும் கிடத்திவிட்டாய்
இன்னும் என்ன என்ன திட்டமோ
சொல்லிவிடு என் மோகினி ...
கங்கையின் மேலானவள் நீ என்றால்
நான் மணக்க தகுதி உடையோள் நீயே
நீ மணக்க தகுதி பெற்றவனும் நானே
நினைவெல்லாம் நீயே
நிஜமெல்லாம் நீயே
கணவெல்லாம் நீயே
கண் பார்க்கும் இடமெல்லாம் நீயே
வாசனைகள் எல்லாம் நீயே
வார்த்தைகள் அனைத்திலும் நீயே
மோகம் இல்லை உன் மீது
யோகம் உண்டு உன்னை அடையும்போது !!!
வஞ்சி கொடியே
வாசனை மல்லியே
வற்றாத வசந்தமே ...
நிச்சயம் நீ சிந்தித்து இருக்க மாட்டாய்
என்னை உன் மணாளனாய்
என்னை உன் வாழ்க்கை துணையாய்
என்னை உன் சரி பாதியாய்
சில நொடிகள் நின்று செல்
எனக்காக சிந்தனை செய்
ராஜ ராஜேஸ்வரத்தில்
இந்த யுவராஜனை நினைத்து ...
உனக்கு நிச்சயம் புலப்படும்
கடாரம் வென்ற சோழனும் நானே
கழனிகளில் உன்னை ஊடரத்துவனும் நானே
உன் பிரியமான தோழனும் நானே
உன் பட்டம் பெற்றவனும் நானே
உன்னை பாடியவனும் நானே
ஞானியும் நானே
போதும் என் பாட்டு...
புரிந்தால் கூட்டி செல் என்னை
பூம்பட்டினத்திற்கு
இல்லையேல்
காத்திருப்பேன் கன்னி காலமெல்லாம்
உன் பயண சுகம் கண்டு
கரையோரம் கீதம் இசைப்பேன்
உன் காட்சி கண்டு ...
நீ வாழ நலமுடன்
உன் காதோரம் இசைத்து பாடுவேன்
"வஞ்சி வாழிய வாழியவே " என்று ...
--------------------------------------------------------------
என் பாட்டும் புதிர்கள் போடும்
அது உனக்கு புரிந்தால் போதும்
--------------------------------------------------------------
சிலேடை ...
என் இரு மனைவியரை நினைத்து ...!!!
காதல் கொள்கிறது என்னை ...
கண் மூடி திறக்கும் முன்னே ...
********************************************
ரங்கனின் பாதம் பணியாதே
என் நாயகர் கால் வருடி செல்லடி
நீ கரை தொடும்போதெல்லாம்
என் கோபம் கரை தாண்டுகிறதடி
கனவெல்லாம் நீயே
கண் திறந்து பார்த்தாலும் நீயே
கானல் நீராய்...
மெய்யாக வர பொழுதுதில்லையோ
இல்லை வரத்தான் பிடிக்கவில்லையோ ???
விரும்பினேன் உன்னை
உன் அழகிற்காக
உன் அடக்கத்திற்காக
உன் அசைவிற்காக
உள்ளவர்களை விடவும் உனக்கு
உயர்வான வாழ்கை என்னால் தரமுடியும்
உயர்வானவன் நான் என்பதை
உலகாளும் ஈசனிடம் தெரிந்துகொள் !!!
வருவேன் வருவேன் என்று
பொய் உரைத்து வதைத்தாய்
வந்த பின் வழிந்தோடினாய்
சொல்லாமல் என்னை விட்டு
நீ படி துறை தாண்டுகையில்
என் பாதி உயிர் போச்சுதடி ...
உடனே உயிர் பெற்று வா
என் உறவிற்கு உயிர் கொடுக்க
தனிமையின் சுகத்தை தந்தாய்
என்னை தனிமையிலும் கிடத்திவிட்டாய்
இன்னும் என்ன என்ன திட்டமோ
சொல்லிவிடு என் மோகினி ...
கங்கையின் மேலானவள் நீ என்றால்
நான் மணக்க தகுதி உடையோள் நீயே
நீ மணக்க தகுதி பெற்றவனும் நானே
நினைவெல்லாம் நீயே
நிஜமெல்லாம் நீயே
கணவெல்லாம் நீயே
கண் பார்க்கும் இடமெல்லாம் நீயே
வாசனைகள் எல்லாம் நீயே
வார்த்தைகள் அனைத்திலும் நீயே
மோகம் இல்லை உன் மீது
யோகம் உண்டு உன்னை அடையும்போது !!!
வஞ்சி கொடியே
வாசனை மல்லியே
வற்றாத வசந்தமே ...
நிச்சயம் நீ சிந்தித்து இருக்க மாட்டாய்
என்னை உன் மணாளனாய்
என்னை உன் வாழ்க்கை துணையாய்
என்னை உன் சரி பாதியாய்
சில நொடிகள் நின்று செல்
எனக்காக சிந்தனை செய்
ராஜ ராஜேஸ்வரத்தில்
இந்த யுவராஜனை நினைத்து ...
உனக்கு நிச்சயம் புலப்படும்
கடாரம் வென்ற சோழனும் நானே
கழனிகளில் உன்னை ஊடரத்துவனும் நானே
உன் பிரியமான தோழனும் நானே
உன் பட்டம் பெற்றவனும் நானே
உன்னை பாடியவனும் நானே
ஞானியும் நானே
போதும் என் பாட்டு...
புரிந்தால் கூட்டி செல் என்னை
பூம்பட்டினத்திற்கு
இல்லையேல்
காத்திருப்பேன் கன்னி காலமெல்லாம்
உன் பயண சுகம் கண்டு
கரையோரம் கீதம் இசைப்பேன்
உன் காட்சி கண்டு ...
நீ வாழ நலமுடன்
உன் காதோரம் இசைத்து பாடுவேன்
"வஞ்சி வாழிய வாழியவே " என்று ...
--------------------------------------------------------------
என் பாட்டும் புதிர்கள் போடும்
அது உனக்கு புரிந்தால் போதும்
--------------------------------------------------------------
சிலேடை ...
என் இரு மனைவியரை நினைத்து ...!!!